வீதியில் கைவிடப்பட்ட ஆண்குழந்தை மீட்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் அநாதரவாகக் கைவிடப்பட்ட
நிலையில் பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இன்று காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இச்சிசு காணப்பட்டுள்ளது .
இவ்வீதியால் சென்றவர்கள் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு பார்த்தபோது சிசு கண்டுபிடிக்கப்பட்டது .
பின்னர் அப்பகுதிக் கிராமசேவகருக்கு அறிவித்ததை அடுத்து கிராம சேவகர் பொலிஸார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சிசுவை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் . இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

Post a Comment Blogger Facebook