புங்குடுதீவில் மின்விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை.
புங்குடுதீவுப் பகுதிக்கான மின்விநியோகத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில்
நடைபெற்று வருகின்றன .
இதன் முதற்கட்டமாக காரைநகரிலிருந்து கடல் மார்க்கமாக புங்குடுதீவுக்கு கேபிள் இணைப்புகளைப் பொருத்தும் பணிகள் பூர்த்தியாகும் தறுவாயில் உள்ளதுடன் , புங்குடுதீவில் புதிதாக மின்தூண்கள் நடப்பட்டு மின்கம்பிகள் இணைக்கப்பட்டு வருவதாகவும் மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இதனால் , மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் புங்குடுதீவில் உள்ளவர்கள் சீரான மின் விநியோகத்தைப் பெறுவதற்கு வழியேற்பட்டுள்ளதோடு , மாணவர்களும் விவசாயிகளும் இதனால் பெரும் நன்மை அடைவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment Blogger Facebook