குடாநாட்டில் உல்லாச பயணிகள் கூடும் இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்.
யாழ் . குடாநாட்டுக்கு வருகை தரும் மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் உரிய
வகையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படாத விடத்து டெங்கு நுளம்பின் பெருக்கம் மீண்டும் அதிகரிக்கும் நிலை தோன்றும் என்று யாழ் . பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ . கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது : -
தற்போது பாடசாலை விடுமுறை காரணமாக யாழ் . குடாநாட்டில் ஆலயங்கள் , திருவிழாக்கள் போன்றன இடம்பெற்று வருவதாலும் வெளியிடங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான மக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது .
இந்நிலையில் , பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பொலித்தீன் பைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பொருட்கள் போடப்படும் நிலைமைகள் தோன்றும் . இவற்றை உரிய வகையில் அகற்றப்படாது விடும் பட்சத்தில் டெங்கு நுளம்புகள் அப்பகுதிகளில் பெருகும் நிலை தொன்றும் .
எனவே , இவ்விடயம் குறித்து அனைவரும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என்று சுகாதாரப் பணிப்பாளர் மேலும் கூறினார்

Post a Comment Blogger Facebook